Saturday 30 August 2014

Pakku Mattai Plate | Business Ideas in Tamilnadu | பாக்கு மட்டை தட்டு தொழில்

Pakku Mattai Plate | Business Ideas in Tamilnadu | பாக்கு மட்டை தட்டு தொழில்



இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்புமிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம். அந்த வகையில் வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து சுற்றுபுறச்சூழலைப் பாதிக்காத பிளேட்டுகள் தயாரிக்கப்பட, இப்போது அது மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க என பெருமளவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளைவு வீணான பொருள் விலைமதிப்பிற்குரிய பொருளாக மாறிவிட்டது.
இதன் காரணமாக, பாக்கு மட்டை தயாரிக்கும் தொழில் இப்போது கனஜோராக நடந்து வருகிறது. சிறுதொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் இந்த தொழில் நிச்சயம் கை கொடுக்கும். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு ஏதுவான தொழில் இது.  
மூலப்பொருள்!
பாக்கு மட்டைதான் இந்த தொழிலுக்குத் தேவையான அதிமுக்கிய மூலப்பொருள். பாக்கு மட்டைகள் கேரளா, ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் கர்நாடக மாநிலம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. கர்நாடக மாநிலத்திலிருந்து கிடைக்கும் மட்டைகள் அதிக நீளம் கொண்டவை என்பதால் பெரும் பாலானவர்கள் அங்கு கிடைக்கும் பாக்கு மட்டையைத்தான் அதிகம் வாங்குகின்றனர்.

விநாயகா பிளேட்ஸ்,Salem

--------

நாங்கள் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் மிஷின் பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 10 வருடங்களாக சேலத்தில் செய்து வருகிறோம். 5 மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும். தினமும் 8 மணி நேரம் வேலை செய்தால் மாதம் 15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். வீட்டில் இருந்தே ஓய்வு நேரத்தில் மகளிர் மற்றும் ஊனமுற்றோர்கள் கூட எளிதில் இயக்க கூடிய வகையில் எளிதான் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று பாக்கு மட்டை தட்டுகள் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி குறைவாக உள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுள்ளதால் பாக்கு மட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

பாக்கு மர தட்டுகள் மக்கும் தன்மையுள்ளது. இதனால் சுற்று புற சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என்பதால் அரசாங்கம் இத்தொழிலுக்கு நல்ல ஆதரவு அளித்து வருகிறது. நாங்கள் இந்த பாக்கு மட்டை தொழிலில் தேவையான மேனுவல் மிஷின், ஹைட்ராலிக், ஆட்டோமேடிக் இயந்திரங்களை வடிவமைத்து கொடுக்கிறோம். எங்களிடம் இயந்திரம் வாங்குவோருக்கு இலவச பயிற்சியும் அளிக்கிறோம்.

தேவையான பாக்கு மட்டைகளை நாங்களே சப்ளை செய்கிறொம். உற்பத்தி செய்த தட்டுக்களை நாங்களே நல்ல விலைக்கு பெற்று கொள்கிறோம். மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் வங்கி மூலம் லோன் பெற்று தொழில் தொடங்குவோருக்கு திட்ட அறிக்கையும் ஆலோசனைகளும் வழங்குகிறோம்.

5 மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும்

                1)யூனிட் 1 -- Manual 5 Machines ------ ரூ .75,000
               2)யூனிட் 2 -- Hydraulic 5 Machines   ----- ரூ .90,000
           3)யூனிட் 3 -- Semi Automatic 5 Machines---- ரூ .2,00,000
          4)யூனிட் 4 -- Fully Automatic 5 Machines ---- ரூ .2,50,000

                     *மின்சாரம் ஒரு ஹெச்.பி. (வீட்டு சர்வீஸ்)  போதும் . 


ஒரு மணி நேரத்தில் ஒரு மெசின் மூலம் 60 தட்டுகளை தயாரிக்கலாம் 

*நாங்கள் உங்களுக்கு ஒரு மட்டை ரூ.2 என்ற விலையில் தருவோம் .
*ஒரு மட்டையில் 2 முதல் 3 ப்ளேட் வரை தயாரிக்கலாம்.

ப்ளேட்டின்  அளவு பொறுத்து அதனை விலை கொடுத்து திரும்ப வாங்கிகொள்கிறோம் .





மேலும் விவரங்களுக்கு -
  தொடர்பு கொள்க.
விநாயகா பிளேட்ஸ்,Salem
சிறப்பம்சங்கள் 
                               *இலவச ட்ரைனிங் 
                               *ஒரு வருட இலவச மெசின் சர்வீஸ் 
                    *அரசு மானியத்துடன் கூடிய திட்ட அறிக்கை                 தயாரித்து தரப்படும் .

Pakku Mattai Plate Making Video
பாக்கு மட்டை தயாரிப்பு வீடியோ கீழே 
|
|
V



தயாரிக்கும் முறை!
பாக்கு மட்டையை சுத்தமான தண்ணீர் தொட்டியில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு பிரஷ்ஷினால் சுத்தம் செய்து அதிலிருக்கும்  அழுக்குகளை அகற்ற வேண்டும். சுத்தம் செய்யப் பயன்படுத்தும் தண்ணீரில் வேப்ப எண்ணெய் அல்லது மஞ்சள் தூள் போன்றவற்றை கலந்து  கொள்ளலாம். இதனால் மட்டைகளில் பூஞ்சை வருவது

தடுக்கப்படும். பிறகு அந்த மட்டைகளை சூரிய வெளிச்சத் திலோ அல்லது காற்றிலோ உலர வைக்க வேண்டும். ஆனால், மட்டை காய்ந்து பிளந்துவிடும் அளவுக்கு காய வைக்கக் கூடாது. பக்குவமான பதத்தில் காய்ந்த மட்டைகளே சரியாக வரும். காய்ந்த மட்டைகளை இயந்திரத்தில் கொடுத்து பிரஸ் செய்யும்போது வெப்பத்தினால் மட்டை பக்குவப்பட்டுவிடும். சூடு தணிந்த பின்பு பிளேட்டுகளை தேவையான அளவுகளில் இயந்திரத்திலேயே கட் செய்து எடுத்து, சுத்தம் செய்தால் விற்பனைக்கு
ரெடி!
முதலீடு!
இந்த தொழில் செய்வதற்கு 75,000 முதல் 2,50,000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும். 

                                         

மானியம்!  
இந்த தொழில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வருவதால் 2.28 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். மானியத் தொகை யானது இந்த தொழிலுக்கு வாங்கிய கடன் கணக்கில் மூன்று வருடத் திற்குப் பிறகு வரவு வைக்கப்படும்.
இயந்திரம்!
ஒரு யூனிட்டுக்கு ஐந்து விதமான இயந்திரங்கள் தேவை. இந்த ஐந்து விதமான இயந்திரத்திலிருந்து 4, 6, 8, 10, 12 இஞ்ச் அளவுகளில் பாக்கு மட்டை பிளேட் தயாரிக்க முடியும். மேனுவல், ஹைட்ராலிக் மற்றும் ஆட்டோமேட்டிக் என இயந்திரங் கள் பலவிதங்களில் இருக்கின்றன. இதில் மேனுவல் இயந்திரம் எனில் 75,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஆகும். ஹைட்ராலிக் இயந்திரம் 90,000 ரூபாய் முதல் 1,25,000 ரூபாயும், ஆட்டோமேட்டிக் இயந்திரம் எனில் 2.50 லட்சம் ரூபாய் முதல் 4.50 லட்சம் வரை ஆகும். ஒரு யூனிட் இயந்திரத்தை கொண்டு ஐந்து விதமான அளவுகளில் பிளேட்டு களைத் தயாரிக்கலாம்.  
வேலையாட்கள்!
இந்த தொழிலுக்கு குறைந்த பட்சம் இரண்டு முதல் ஏழு நபர்கள் வரை வேலைக்கு தேவை.  பெரும்பாலும் வீட்டிலிருப் பவர்களை வைத்தே இந்த தொழிலை செய்துவிடலாம்.  
                                             

தயாரிக்கப்படும் அளவுகள்!
12 இஞ்ச் அளவு கொண்ட பிளேட் கல்யாண வீடுகளிலும், 10 இஞ்ச் பிளேட்டுகள் வளைகாப்பு விசேஷங்கள் மற்றும் சுற்றுலா தேவைகளுக்கும், 8, 6 இஞ்ச் பிளேட்டுகள் கோயில்களில் அன்னதானம் வழங்கவும், 4 இஞ்ச் பிளேட்டுகள் பிரசாதங்கள் வழங்குவதற்கும் பயன்படுகின்றன.
சந்தை வாய்ப்பு!  
பிளாஸ்டிக் பொருட்களினால் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு மாற்றுப் பொருளாக பாக்கு மட்டை பிளேட்டுகளை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை இருப்பதும், வருங்காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் தடைகளும் இந்த தொழிலுக்கு சாதகமான விஷயங்கள்.
ஃபேன்ஸி ஸ்டோர்கள், கேட்டரிங் நடத்துபவர்கள், உள்ளூர் விற்பனையாளர்கள் மட்டு மல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய நிறைய வாய்ப்புண்டு. சுற்றுச்சூழலை பாதுகாக்க நினைக்கும் நாடுகளில் வருங்காலத்தில் இந்த பிளேட்டு களுக்கான சந்தை வாய்ப்பு அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.  

சாதகங்கள்!
* சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருள். எந்தவிதமான செயற்கை வாசமும், கெமிக்கல் கலப்படமும் கிடையாது.
* கையில் வைத்து சாப்பிடுவதற்கு சுலபமாக இருப்பதால் பார்ட்டிகளிலும், பஃபே முறையில் சாப்பிடுவதற்கும் பயன்படுத்தலாம்.  
* மைக்ரோவேவ் அவனில் சமையல் செய்யும்போது உணவுகளை சூடுபடுத்த இந்த பிளேட்டுகளை பயன்படுத்தலாம்.
* விரும்பிய வடிவங்களில் தம்ளர், கிண்ணம் போன்ற வடிவங்களில்கூட இதைத் தயாரிக்கலாம்.
பாதகங்கள்!
மழைக் காலத்தில் பாக்குமட்டை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே, மழைக் காலத்திற்கு முன்பே பாக்கு மட்டையை வாங்கி வைத்துக் கொள்வதன் மூலம் மூலப்பொருள் கிடைக்காமல் திண்டாடும் நெருக்கடியைத் தவிர்க்கலாம். அத்துடன் மழைக் காலத்தில் பாக்கு மட்டையில் பூஞ்சைகள் வர வாய்ப்பிருக்கிறது. அதனை தடுக்கும் விதமாக பாக்கு மட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
விற்பனைக்கான விலை!
12 இஞ்ச் பிளேட் ஒன்று 2.20 ரூபாய்க்கும், 10 இஞ்ச் 1.50 ரூபாய்க்கும், 8 இஞ்ச் 1.25 ரூபாய்க்கும், 6 இஞ்ச் 75 பைசாவுக்கும், 4 இஞ்ச் 50 பைசாவுக்கும் விற்பனை செய்யலாம்.
நல்ல எதிர்காலம் இருக்கும் இந்த தொழிலில் இப்போதே இறங்குவதுதான் நல்லது.

அதிக டிமாண்ட் இருக்கும் தொழில்!
''அதிக டிமாண்ட் இருக்கும் இந்த தொழிலில் நம்பி இறங்கலாம்'' என்கிறார் கோயம்புத்தூர், கணபதி பிளேட்ஸ் உரிமையாளர் கிரிராஜன்.

''பாக்கு மரத்திலிருந்து கிடைக்கும் மட்டை, முன்பு எந்தவித பயன்பாட்டிற்கும் தேவைப்படாமல் இருந்தது. ஆனால், இன்றோ மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த தொழிலை சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள் குறைந்த பட்ச முதலீடாக 75,000 ரூபாயைக் கொண்டு ஆரம்பிக்கலாம். மூலப்பொருள் தவிர வேறு எந்தவிதமான பொருட்களும் தேவைப்படாத தொழில் இது. மின்சாரம் ஒரு ஹெச்.பி. அளவில் தேவைப்படும். 2,500 சதுரடியில் இடம் இருந்தால் போதும். இரண்டு வருடங்களில் பிரேக் ஈவன் அடைந்து விடலாம்.
பாக்கு மட்டையை சுத்தம் செய்ய ஆறு அடி உயரம், அகலம் கொண்ட தண்ணீர்த் தொட்டி தேவை. பெரும்பாலும் உணவு பரிமாறவே இந்த  பிளேட்டுகள் பயன்படுத்தப்படுவதால் பூஞ்சை வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். சில இடங்களில் இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களே இந்த பிளேட்டுகளை விலைக்கு வாங்கிக் கொள்ளவும் செய்கின்றன. நல்ல டிமாண்ட் இருக்கும் தொழில் என்பதால் நம்பி இறங்கலாம்'' என்றார்.

விநாயகா பிளேட்ஸ்,Salem


நாங்கள் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் மிஷின் பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 10 வருடங்களாக சேலத்தில் செய்து வருகிறோம். 5 மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும். தினமும் 8 மணி நேரம் வேலை செய்தால் மாதம் 15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். வீட்டில் இருந்தே ஓய்வு நேரத்தில் மகளிர் மற்றும் ஊனமுற்றோர்கள் கூட எளிதில் இயக்க கூடிய வகையில் எளிதான் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று பாக்கு மட்டை தட்டுகள் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி குறைவாக உள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுள்ளதால் பாக்கு மட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

பாக்கு மர தட்டுகள் மக்கும் தன்மையுள்ளது. இதனால் சுற்று புற சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என்பதால் அரசாங்கம் இத்தொழிலுக்கு நல்ல ஆதரவு அளித்து வருகிறது. நாங்கள் இந்த பாக்கு மட்டை தொழிலில் தேவையான மேனுவல் மிஷின், ஹைட்ராலிக், ஆட்டோமேடிக் இயந்திரங்களை வடிவமைத்து கொடுக்கிறோம். எங்களிடம் இயந்திரம் வாங்குவோருக்கு இலவச பயிற்சியும் அளிக்கிறோம்.

தேவையான பாக்கு மட்டைகளை நாங்களே சப்ளை செய்கிறொம். உற்பத்தி செய்த தட்டுக்களை நாங்களே நல்ல விலைக்கு பெற்று கொள்கிறோம். மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் வங்கி மூலம் லோன் பெற்று தொழில் தொடங்குவோருக்கு திட்ட அறிக்கையும் ஆலோசனைகளும் வழங்குகிறோம்.


5 மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும்

                1)யூனிட் 1 -- Manual 5 Machines ------ ரூ .75,000
               2)யூனிட் 2 -- Hydraulic 5 Machines   ----- ரூ .90,000
           3)யூனிட் 3 -- Semi Automatic 5 Machines---- ரூ .2,00,000
          4)யூனிட் 4 -- Fully Automatic 5 Machines ---- ரூ .2,50,000



                     *மின்சாரம் ஒரு ஹெச்.பி. (வீட்டு சர்வீஸ்)  போதும் . 

 ஒவ்வொரு யூனிட் பொருத்தும் அதன் உற்பத்தி திறன் மாறுபடும் 

மேலும் விவரங்களுக்கு -
  தொடர்பு கொள்க.
விநாயகா பிளேட்ஸ்,Salem
சிறப்பம்சங்கள் 
                               *இலவச ட்ரைனிங் 
                               *ஒரு வருட இலவச மெசின் சர்வீஸ் 
                    *அரசு மானியத்துடன் கூடிய திட்ட அறிக்கை                                     தயாரித்து தரப்படும் .

Sunday 17 August 2014

ஸ்டிக்கர் கட்டிங் வண்டியில் - Sticker Cutting

 
ஸ்டிக்கர் கட்டிங் வண்டியில் - Sticker Cutting

பச்சக்கென்று ஒரு வருமான வாய்ப்பு!

வா கனங்கள் பெருகிவிட்டன என்பதற்கு பரபரப்பான சாலைகளும், அதில் பறக்கும் மக்களுமே சாட்சி! வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகும் இந்த நேரத்துக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது நம்பர் பிளேட் ஸ்டிக்கர் ஒட்டும் தொழில்!
எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தன் வண்டி மட்டும் தனி அடையாளத்துடன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் வாகன உரிமையாளர்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதற்காக வண்டியில் கூடுதலாக அலங்காரம் செய்ய ஆசைப் படுகிறார்கள். அதனால், இந்தத் தொழிலுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.
ஒரு கம்ப்யூட்டர், ஸ்டிக்கர் கட்டிங் மெஷின், கொஞ்சம் ஐடியா - இவை இருந்தால் போதும். இந்தத் தொழிலைத் தொடங்கிவிடலாம். கம்ப்யூட்டர் என்பது 20 ஆயிரம் ரூபாயிலேயே கிடைக்கும். ஸ்டிக்கர் கட் பண்ணிக் கொடுக்கும் பிளக்கர் மெஷின் 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். கம்ப்யூட்டர் அறிவு கொஞ்சம் இருந்தால் போதும். கட்டர் மெஷின் கொடுப்பவர்களே ஸ்டிக்கர் டிஸைனுக்கான சாஃப்ட்வேர்களையும் கம்ப்யூட்டரில் நிறுவிவிடுவார்கள். அதனால், சாஃப்ட்வேர் செலவு ஏதும் வராது. அதுதவிர, ஆரம்ப கட்ட செலவுகளுக்காக 5,000 ரூபாய் வைத்துக்கொண்டால் போதும். ஆக, 50 ஆயிரம் ரூபாய் கையில் இருந்தால் ஸ்டிக்கர் ஒட்டும் தொழிலைத் தொடங்கிவிடலாம்.
கடை வைப்பதற்கு பெரிய அளவில் இடமோ, ஷோரூமோ தேவையில்லை. கம்ப்யூட்டரையும், கட்டிங் மெஷினையும் வைக்கக்கூடிய அளவுக்கு இடம் இருந்தாலே போதும். கடையின் அளவு முக்கியமல்ல... அதை எந்த இடத்தில் வைக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம். ஆட்டோ மொபைல் ஷோரூம்கள், ஸ்பேர் பார்ட்ஸ் அதிகமாக விற்கும் ஏரியா, மெக்கானிக்குகள் அதிகம் இருக்கும் பகுதி போன்ற இடங்களிலும், வாகனங்களைப் பதிவு செய்யும் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அருகிலும் கடை வைக்கலாம்.
ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் கடைகள், மெக்கானிக் ஷாப்கள் போன்ற இடங்களில் கடையைப் பற்றிச் சொல்லும் சின்ன நோட்டீஸ்களை விநியோகித்து வைத்தால், அவர்கள் நல்ல வாய்ப்புகளைச் சொல்வார் கள். அடுத்ததாக என்னென்ன மாடல்களில் எல்லாம் ஸ்டிக்கர் இருக்கிறதோ, அதை எல்லாம் மக்கள் பார்வையில் படும்படி கடைக்கு வெளியே ஒட்டி வைக்க வேண்டும். அதைப் பார்த்து பலரும் கடையை நாடி வர வாய்ப்பிருக்கிறது.
நல்ல ஆட்டோமொபைல் பொருட்கள் விற்பனை ஆகும் ஏரியா என்றால் ஒரு நாளைக்கு இருபதிலிருந்து முப்பது டூவீலர்களுக்கும், பத்திலிருந்து இருபது கார்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டித் தரமுடியும். இதர பகுதிகள் என்றால் குறைந்தது பத்து டூ வீலர்களுக்காவது ஸ்டிக்கர் ஒட்ட வாய்ப்பு கிடைக்கும். இந்த இடங்களில் ஏற்கெனவே பலரும் இதேபோன்ற கடைகள் வைத்து இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது டிஸைன்களை அறிமுகம் செய்து, போட்டியைச் சமாளிக்கலாம்.
குறைந்தபட்சம், நான்கு வண்டி களுக்கு ஒட்டக்கூடிய பெரிய ‘ஒளிரும் ஸ்டிக்கர் ஷீட்’ 30 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதே அளவு, சாதாரண கலர் ஸ்டிக்கர் ஷீட்’ 8 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த இரண்டு வகைகளை சேர்த்து ஒட்டினால் 100 ரூபாய் வரை வருமானம் பார்க்கமுடியும். இரண்டு சக்கர வண்டியின் முன் மற்றும் பின் உள்ள நம்பர் பிளேட் ஒட்டித்தருவதற்கு 30 ரூபாய் வசூலிக்கலாம். கார் என்றால் நூறு ரூபாய்வரை பெறலாம். பைக்கின் பக்கவாட்டில் டிஸைன் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு 100 ரூபாய் வரை செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். கார் வைத்திருப்பவர்கள் 250 ரூபாயில் இருந்து 500 வரை செலவு செய்கிறார்கள்.
இப்போது புதுப்புது மாடல்களில் ஸ்டிக்கர்கள் வந்திருக்கின்றன. சில வாடிக்கையாளர்கள் அரசியல் தலைவர்களின் போட்டோவை ஒட்டிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுடைய போட்டோவையேகூட வண்டியில் ஸ்டிக்கராக ஒட்டிக்கொள்ள விருப்பப்படுவார்கள். அப்படியான உருவத்தை நாமே ஸ்டிக்கர் செய்துதந்து கூடுதலாக வசூலிக்கலாம்.
அதோடு போலீஸ், அட்வகேட், டாக்டர் போன்ற துறை சார்ந்த ஸ்டிக்கர் களையும் வாடிக்கையாளர்கள் விருப்பப்படும் வகையில் வாசகங்களையும் கொடுத்து அசத்தி, கூடுதல் கஸ்டமர்களைப் பிடிக்கலாம்.
இப்படி வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருமானம் பார்ப்பதோடு, அரசு விழிப்பு உணர்வு பிரசார ஸ்டிக்கர்கள், கடைகளுக்கான விளம்பர ஸ்டிக்கர்கள் போன்றவற்றை அச்சிட்டுக் கொடுப்பதிலும் லாபம் பார்க்கலாம். இவற்றைத் தவிர கம்பெனி பெயர், வீட்டின் முன்னால் வைக்கும் பெயர் பலகைகள் எழுதுதல், ஸ்கூல் பைகளில் ஸ்டிக்கர்களை பிரின்ட் செய்து தருவது போன்ற ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.
செலவு என்றால் கடை வாடகை, ஒரு ஆளுக்கு சம்பளம், மின்சாரக் கட்டணம், போன் பில் இவை மட்டும்தான். குறைந்தது ஐயாயிரம் ரூபாய் இதற்கு செலவு ஆகும் என்று வைத்துக்கொண்டால் கூட ரூபாய் 15,000 வரை வருமானம் பார்க்கமுடியும்.
கீ செயின்கள் சின்னச் சின்ன பொம்மைகள், காரில் வைக்கிற அழகுப் பொருட்களை வாங்கி வைத்தால் கூடுதலாக வருமானம் கிடைக்கும்.
என்ன... இது டக்கர் பிஸினஸ்தானே!

ரெடிமிக்ஸ் சிமென்ட், மணல், ஜல்லி



 ரெடிமிக்ஸ் சிமென்ட், மணல், ஜல்லி 


ரெடிமிக்ஸ் உங்க ஊருக்கு வந்தாச்சா..?

தொழில்

ரெடிமிக்ஸ்
உங்க ஊருக்கு வந்தாச்சா..? 
மி ன்னல் வேக முன்னேற்றம் இன்று கட்டுமானத் துறையில்!
பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது தளம் போடும் பணி. இரண்டாவது தளத்துக்கான கான்க்ரீட் போடவேண்டும். ஜல்லிக்கல் சப்ளை செய்பவர் இழுத்துக்கொண்டே இருக்கிறார். ஜல்லி டிமாண்ட் காரணமாக, விலையும் ‘ஜிவ்’வென ஏற... ஒருபக்கம் பட்ஜெட் கவலை... இன்னொருபக்கம், குறித்த நேரத்தில் தளம் போட்டாகவேண்டும் என்ற வீட்டு உரிமையாளரின் நெருக்குதல்... தவித்துப் போனார் இன்ஜினீயர் ராகவ்!
அவருடைய போன் ஒலிக்க... எதிர்முனையில் நண்பர் சுதர்சன். பேச்சு வாக்கில் தன் பிரச்னையைச் சொல்ல... சூப்பராக ஐடியா கொடுத்தார் அவர். ‘இதுக்கு ஏன் கவலைப்படறே! ரெடிமிக்ஸைக் கொண்டுவரச் சொல்லு! இரண்டு நாள் போடற தளத்தை, மூணே மணி நேரத்திலே முடிச்சுடுவாங்க. கலவையும் தரமா இருக்கும்’’ என்றார்.
‘‘இல்லையே! பட்ஜெட் கட்டுப்படியாகாதே...’’ என்று இழுத்தார் ராகவ்.
‘‘முயற்சிக்காமலே முடிவெடுக்காதே... சிமென்ட், மணல், ஜல்லி விலையை எழுது... அடுத்து, சித்தாள், மேஸ்திரி கூலி, அப்புறம் கலவை மெஷின் வாடகை... வேறென்ன செலவு... அதையும் பட்டியலில் சேர்த்துக்கோ! ரெடிமிக்ஸ் சப்ளை பண்றவங்ககிட்ட ரேட் விசாரி! ஒருவேளை அதைவிட ரெடிமிக்ஸ் ரேட் கொஞ்சம் கூடுதலா வந்தாலும் பரவாயில்லை. உனக்கு நேரம் மிச்சமாகுமே... அவசர நேரத்தில் பட்ஜெட் பார்க்கலாமா..? தாராளமாக வாங்கிடலாம்!’’ என்றார். சரி என்று விசாரித்தால், ரெடிமிக்ஸ் கான்க்ரீட் என்பது ஒரு க்யூபிக் மீட்டருக்கு சுமார் 3,000 ரூபாய் வரை என்றார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் நார்மலாக ஏற்படும் செலவைவிட, 5,000 ரூபாய் குறைவாகவே வந்தது. உடனே, ரெடிமிக்ஸ் கலவையை வாங்கினார்... வேலையை முடித்தார் ராகவ்.
ந கரங்கள் கான்க்ரீட் காடுகளாக மாறிக்கொண்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில், ரியல் எஸ்டேட் துறையினர் புதிய மாற்றங்களை வரவேற்கத் தயாராகிக்கொண்டே இருக் கின்றனர். ரோட்டை அடைத்து கல், மணல், சிமென்ட் கொட்டி கலவை கலந்து, எறும்பு வரிசை யாக சித்தாள்கள் சிமென்ட் சட்டிகளைக் கைமாற்ற, வாரக் கணக்காக தளம் போட்ட காலம் போயே போய்விட்டது. ஒரு போன் போட்டால், வண்டி நிறைய கலவை வருகிறது. அடுத்த போன் தகவலில் அந்தக் கலவையை பம்ப் செய்து மேலேற்றி, அதிகபட்சம் ஆறு மணிநேரத்தில் எவ்வளவு பெரிய தளத்தையும் போட்டு முடித்துவிடுகிற டெக்னாலஜி வந்துவிட்டது. இதன் பின்னணியில் இருப்பது ரெடிமிக்ஸ் கலவை!
சின்னச் சின்ன சிக்கல்கள் தான் திடீர் புதுமைகளைக் கொண்டுவரும் என்பதில் ரெடிமிக்ஸ் மாற்றமும் ஒன்று!
நெருக்கமான தெருக்கள், சதா வாகனப் போக்குவரத்து, ஆட்கள் போதாத நிலை, கலவைப் பொருட்களில் ஏதாவது ஒன்றுக்கு திடுமென ஏற்படும் தட்டுப்பாடு என்று கட்டடத் துறையில் பல சிக்கல் கள். இந்தக் கவலையைப் போக்க வந்திருக்கிற ரெடிமிக்ஸை, செட்டிநாடு சிமென்ட், டால்மியா சிமென்ட் உள்ளிட்ட பல பெரிய சிமென்ட் நிறுவனங்களே பிளான்ட் போட்டு கலவையைத் தயாரித்து விற்க முன்வந்திருக்கின்றன. இதுதவிர, கட்டடத் துறையில் புகழ்பெற்ற எல் அண்ட் டி போன்ற நிறுவனங்களும் கலவையை கலந்து சப்ளை செய்யும் பிளான்ட்களை வைத்திருக் கின்றன.
‘‘இந்தக் கலவைகளில் என்ன விகிதத்தில் மணல், சிமென்ட், கற்கள் சேர்க்கவேண்டும் என்று கம்ப்யூட் டரில் புரோகிராம் செய்துவிட்டால், துளி பிசிறு இல்லாமல் கலவை இயந்திரம் கலந்து கொடுத்துவிடும். இதனால், பில்டர்களுக்கு ரெடிமிக்ஸ் கலவை மேல் அதீத நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார் செட்டிநாடு சிமென்ட் சார்பாக நிறுவப்பட்டிருக்கும் ரெடிமிக்ஸ் பிளான்ட்டின் மேனேஜர் வி.சங்கரதாஸ்.
கலவைக்குத் தேவையான சிமென்ட் மூட்டைகளை அடுக்கவும், பல லாரி மணல் மற்றும் ஜல்லியைக் கொட்டி வைக்கவும் சுமாராக 10 கிரவுண்ட் இடமும் இவற்றை வாங்கி ஸ்டோர் செய்துகொள்ள சுமார் ஒரு கோடி ரூபாய் வரையான முதலீடும் தேவைப்படும். இதில் அந்த பிளான்ட் மெஷினின் விலையும் அடங்கும். கலவையை எடுத்துச்செல்ல லாரிகள் கைவசம் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால், வாடகைக்கு லாரி தர ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிளான்ட் அமைப்பதற்கு நான்கைந்து பேர் ஒன்றாக முதலீடு செய்து, பார்ட்னர்ஷிப் முறையிலும் தொழில் செய்யலாம். இதற்கு வங்கிக் கடனும் கிடைக்கும். இதிலேயே கலவையை எடுத்துச்செல்லும் வாகனங்களை வாங்கி, அதை வாடகைக்கு விட்டும் சம்பாதிக்கலாம். இதுதவிரவும் கலவை டெலிவரி செய்யும் இடத்தில், அதாவது தளம் போடும் இடத்தில் ஒரு வருமான வாய்ப்பு இருக்கிறது. அது - கலவையைக் கட்டடத்தின் மேலே கொண்டு செல்லும் பம்ப்பிங் மெஷின் வைத்துக்கொள்வது!

முதல் மாடிக்கு தளம் போடுவதைவிட, இரண்டாவது மாடிக்கு சற்று கூடுதல் செலவு பிடிக்கும். ஐந்தாவது மாடி என்றால் இது கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். உயரம் செல்லச் செல்ல, கலவையை சுமந்து செல்ல ஆள்கூலி பெருகுவதால் வரும் செலவு இது! லேட்டஸ்ட் நிலவரப்படி, லாரியில் உள்ள ரெடிமிக்ஸ் கலவையை, பம்ப்பிங் மெஷினில் போட்டால் அது ரப்பர் குழாய் வழியே மேலே தள்ளி தேவைப்படும் தளத்தில் டெலிவரி செய்கிறது. பத்து, இருபது மாடிகள் என்று அநாயசமாக எழும்பும் இந்தக் காலகட்டத்தில் இந்த முறையில்தான் தளம் போடுகிறார்கள். மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் இருக்கும் உலகின் இன்றைய மிக உயர இரட்டைக் கோபுரங்களான ‘பெட்ரோனாஸ் டவர்ஸ்’ இப்படித்தான் தளமிடப்பட்டது. இந்த பம்ப்பிங் மெஷின்கள் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் உயரம் வரை கலவையைத் தள்ளிச் செல்லும்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் இதுபோன்ற கலவை இயந்திரங்களையும் பம்ப்பிங் மெஷின்களையும் தயாரிக்கும் ‘ஸ்விங் ஸ்டெட்டர்’ நிறுவனம் இருக்கிறது. கோலாலம்பூர் ‘பெட்ரோனாஸ் டவர்ஸ்’ கோபுரத்தைக் கட்டப்பட்டதே இவர்களது நிறுவன இயந்திரங்களைக் கொண்டுதான்! ஜெர்மனியைத் தலைமை இடமாகக் கொண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு இந்திய கிளையும் இருக்கிறது. இந்தியாவின் கட்டுமானத்தில் 90% பங்களிப்பு செய்யும் இதன் நிர்வாக இயக்குநர் ஆனந்த் சுந்தரேசன், ‘‘மிகப் பிரமாண்டமாக வளர்ந்துவரும் தொழில் இது. 1999-ல் 27 ஊழியர்களுடன் துவங்கப்பட்டு, இன்று 460 ஊழியர்கள்... டர்ன் ஓவரில் பல மடங்கு வளர்ச்சி... என்று நாங்கள் அடைந்துள்ள முன்னேற்றமே இதற்கு சாட்சி. எங்கள் ஃபேக்டரியில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆறு ரெடிமிக்ஸ் இயந்திரங்களைத் தயார் செய்ய முடிகிறது. இந்த அளவுக்கு மார்க்கெட்டில் டிமாண்ட் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாகவே கட்டடத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியும் தேவையும் இதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம். அடுத்த 10 வருடங்களில் இந்த வளர்ச்சி மேலும் பல மடங்கு அதிகமாகும் என்பது எங்கள் கணிப்பு’’ என்கிறார்.
இவர்களது நிறுவனமே பம்ப்பிங் மெஷின்களையும் தயார் செய்கிறது. ‘‘திருச்சி, மதுரை, சேலம், கோவை போன்ற நகரங்களில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி இருப்பதால், அங்கெல்லாம் புதியவர்கள் பலர் இத்தொழிலுக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். பிளான்ட்களில் இருந்து கான்க்ரீட்டைக் கொண்டு செல்லும் டிரக்குகளை வாங்கி வைத்து, அதில் வாடகை வருமானம் பார்க்கிற இளைஞர்களும் இருக்கிறார்கள். ரெடிமிக்ஸின் வளர்ச்சி, ஆட்டோமொபைல் துறைக்கும் பெரிய அளவில் உதவி இருக்கிறது.
கட்டுமானத் துறையில் இருக்கிற பெரிய நிறுவனங்கள் சில, தங்களுக்கென பிளான்ட் வைத்திருக் கிறார்கள். சிலர் கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டை முடக்க விரும்பாமல், எப்போதெல்லாம் சிமென்ட் தேவையோ, அப்போதைய தேவைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். அனைவரும் இந்த ரெடிமிக்ஸ் பக்கம் திரும்பக் காரணம், இந்த சிமென்ட் கலவையின் நம்பகத் தன்மையும் அதன் அதிகமான உழைக்கும் காலமும்தான். இந்தக் கலவைக்கான ஃபார்முலாவை ஒரு முறை பிளான்ட்டில் பதிவு செய்துவிட்டால், அதை மாற்ற 7 விதமான பாஸ்வேர்ட்கள் தேவைப்படும்’’ என்றார் ஆனந்த் சுந்தரேசன்.
இவரது இண்டஸ்ட்ரி தொடர்பான பணிகளைக் கற்றுத்தரும் பயிற்சி வகுப்பு ஒன்றையும் இவர்களது வளாகத்திலேயே துவங்கி இருக்கிறார்கள். 30 பேர் கொண்ட டீம் இந்த கோர்ஸை முடித்து மிக கட்டுமானத்துறை பணிகளில் செட்டில் ஆகி இருக்கிறார்கள்.
தமிழகத்தின் இரண்டாம் நகரங்கள்கூட கட்டுமானத்துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றன. வீடு கட்டுபவர்களாக இருந்தாலும் சரி, வருமானம் பார்க்க ஆசைப்படுபவர்களாக இருந்தாலும் சரி - அனைத்து நகரத்து மக்களும் கட்டுமானத் துறையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் வரப்பிரசாதமாகவே இருக்கிறது ரெடிமிக்ஸ் துறையின் வளர்ச்சி.
ரெ டிமிக்ஸ் மெஷின்கள் சுமார் பத்தடி உயரம் கொண்டவையாக இருக்கின்றன. இதன் உள் அமைப்பு ஸ்பிரிங் வளையங்கள் போன்ற அமைப்பில் இருக்கிறது. ‘‘இதனுள் 6 டன் அளவு வரை கலவைகளை ஸ்டோர் செய்யமுடியும். சுமார் 6 மணி நேரம்வரை கலவைகள் உடனே கெட்டிப் பட்டுப் போகாமல் இருக்க... ஸ்பெஷல் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. அதேசமயம், லாரியில் ஏற்றப் பட்ட நிமிஷம் முதலே இந்த கன்டெய்னர் உருளை சுற்றிச் சுழன்றுகொண்டே இருக்கும். சாலைகளில் போகும் ரெடிமிக்ஸ் லாரிகளின் பின்பக்கம் இருக்கும் இந்த உருளைகள் சுற்றிக்கொண்டிருந்தால் லோட் செய்யப் பட்டிருக்கிறது என்றர்த்தம்’’ என்கிறார் ஆனந்த் சுந்தரேசன்.

டைனமோ டார்ச் லைட்டு - Dynamo Torch Light

டைனமோ டார்ச் லைட்டு - Dynamo Torch Light

டைனமோ, டைலாமோ... டார்ச் லைட்டு தூளுமா!
‘‘டைனமோ டார்ச்லைட் புதுசா மார்க்கெட்டுக்கு வந்திருக்கு.
பேட்டரி இல்லாமல் கைகளால் அழுத்தினாலே,
டைனமோவில் பவர் ஏறி லைட் எரியும்! அ
ந்த டார்ச்சை வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
சென்னைக்கு வந்த இடத்தில் லாபம் பார்க்கலாமேனு யோசித்தேன்...
என்ன சொல்றீங்க?’’ என்று சென்னை பாரிமுனையில் இருந்து
தொலைபேசியில் ஆர்வமாகப் பேசினார், வேலூர் வாசகர் சரவணன்.
ஆ ர்வத்துக்கு பரிசாக ஆயிரம் ரூபாயைக் கொடுத்தோம். நாம் செல்லும் முன்பே பல கடைகளில் ஏறி இறங்கி விலையை விசாரித்து வைத்திருந்தார்.
நேராக ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் புகுந்து 60 ரூபாய் ரேட்டில் 16 டைனமோ டார்ச் லைட்களை வாங்கினார். அங்கேயே தன் வியாபாரத்தைத் தொடங்கி விட்டார்.
எதிர்ப்பட்ட ஒரு ஆளிடம் டைனமோ டார்ச் பற்றி ஆதியோடு அந்தமாக விளக்கி, வியாபாரத்துக்கு அடி போட்டார். ஆனால், அந்த பார்ட்டி அவசர வேலையாக சட்டென்று பஸ்ஸில் ஏறிவிட்டார்.
ஆனாலும், சோர்வடையாமல் ஒரு ஒரு டி.டி.பி கடைக்குள் புகுந்தவர், அங்கிருந்தவர்களைப் பார்த்து பெரிதாக ஒரு வணக்கத்தைப் போட்டார். ‘‘ஏன் இவ்வளவு டல் வெளிச்சத்தில் வேலை பார்க்கிறீங்க..? கரன்ட் கட் ஆயிடுச்சா? இதோ பாருங்க, இந்த டார்ச் லைட்டை பேட்டரி போடவோ, சார்ஜ் பண்ணவோ தேவையில்லை. டைனமோ சார்ஜ் லைட். ரொம்ப நேரம் கம்ப்யூட்டரில் டைப் அடித்து களைச்சுப்போனால் நாலு தடவை இதை அழுத்தி எக்ஸர்சைஸ் பண்ணிக்கலாம். இதனால், லைட்டோடு சேர்த்து உங்களுக்கும் சார்ஜ் ஏறிக்கும்’’ என்று பேசிப்பேசியே ஆளை மயக்கிவிட்டார். நூறு ரூபாய்க்கு முதல் லைட் கைமாறியது.
சட்டென்று பஸ் பிடித்து சேப்பாக்கத்துக்குச் சென்றார். பஸ் ஸ்டாப்பிலேயே சிக்கினார் இன்னொரு பார்ட்டி.
‘‘சார்... புது மாடல் டைனமோ லைட்! சைக்கிளில் டைனமோ பேட்டரி இருக்கும் இல்ல, அதே சிஸ்டம்தான். இந்தப் பிடியை பத்து தடவை அழுத்தினால் போதும், ஒரு மணி நேரம் லைட் பவர்ஃபுல்லா எரியும். சாதா லைட்னா, அடிக்கடி பேட்டரி செல் வாங்கிப் போட வேண்டி இருக்கும்... மாசத்துக்கு இருபது, முப்பது ரூபாய் செலவாகும். அப்படியே போனா, வருஷத்தில் முன்னூறு, நானூறு செலவாகும். இந்த லைட்டை வாங்கினா, ஐந்து வருஷம் வரை உழைக்குதுனு வெச்சுக்கங்க. ஆயிரக்கணக்கில் மிச்சம்தானே!’’ என்று சரவணன் அடுக்கிக்கொண்டே போக, பார்ட்டியின் கைகள், தானாகவே பாக்கெட்டுக்குப் போனது.
அடுத்து, ஒரு கார்மென்ட்ஸ் கடையில் நுழைந்த சரவணன், அங்கு துணியை வெட்டிக் கொண்டிருந்தவர் களிடம், தன் பொருளின் அருமை, பெருமைகளை அள்ளி வீசினார்.
தைத்துக்கொண்டிருந்த பெண்கள் ஆர்வமாக லைட்டைக் கையில் வாங்கிப் பார்த்தார்கள். ‘‘என்ன ரேட்?’’ என்று கேட்டதும், ‘‘120-னு விக்கறது... நீங்க எத்தனை பீஸ் எடுக்கப் போறீங்கனு சொல்லுங்க. விலையைப் பார்த்துக்கலாம்’’ என்றார் சகாயம் செய்பவரைப் போல!
தங்களுக்குள் பேசி முடிவெடுத்து மூன்று லைட்களை வாங்கினார்கள். 300 ரூபாய்க்கு 25 ரூபாய் குறைத்து வாங்கிக்கொண்டார்.
கடைகள்தான் இலக்கு என்பது போல கடை, கடையாக ஏறி இறங்கினார். ‘‘தெருவில் போகிறவர் களிடம் விற்கலாமே...’’ என்றபோது, ‘‘கடையில் இருப்பவர்கள்தான் இப்படிப்பட்ட பொருட்களை வாங்கமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் கடையைச் சாத்திவிட்டு, கிளம்பும்போது இந்த ஃபேன்ஸி அயிட்டங்கள் விற்கிற கடைகள் மூடியிருக்குமே... அப்புறம் எங்கே போய் பொருள் வாங்குவார்கள். அவர்களைக் குறிவைத்து இப்படியான பொருட்களுடன் போனால், வியாபாரம் நன்றாக இருக்கும். இன்னொன்று அவர்களிடம் எப்போதும் காசு இருக்கும். மனசு லேசாக சலனப்பட்டாலே வாங்கிவிடுவார்கள்!’’ என்று லாஜிக் சொன்னபடியே, ஒரு மெடிக்கல் ஷாப்புக்குள் நுழைந்தார்.
அங்குபோய் சரவணன் டெமோ காட்ட, ‘‘நீ சொல்றது எல்லாம் சரிதான்... ஆனால், டாக்டர் அட்வைஸ் இல்லாமல் நான் எந்த எக்ஸர்சைஸும் செய்றதில்லை... அதனால், எனக்கு வேண்டாம். பக்கத்திலேயே டாக்டர் இருக்கிறாங்க. போய்க் கேட்டுப் பாருங்க...’’ என்றார் கேலியான குரலில்.
‘‘டாக்டருக்கு டார்ச் லைட் தேவைப்படுமே... இருங்க கேட்டுட்டு வர்றேன்...’’ என்று க்ளினிக் உள்ளே புகுந்தார். டாக்டரும், ‘‘என்ன?’’ என்றபடி பார்க்க, டக்கென்று தன் டார்ச் லைட்டை எடுத்துக் காட்டி விளக்க ஆரம்பித்தார் சரவணன். ஆர்வமாக கையில் வாங்கிப்பார்த்த டாக்டர், விலையை விசாரிக்க ஆரம்பிக்க, ‘‘ஒரு கன்சல்டேஷன் காசுதான் டாக்டர்! விலையை யோசிக்காதீங்க...’’ என்று உரிமையோடு பேசினார். காரியம் வெற்றியானது.
வெற்றிவீரராக வெளியில் வந்தவர், மெடிக்கல் ஷாப்காரரிடம், ‘‘டாக்டர் ஒரு லைட் வாங்கி இருக் காங்க. நீங்க ஒரு கஸ்டமர் பிடிச்சுக் கொடுத்ததால, கமிஷன் ரேட்ல தர்றேன். இந்தாங்க... 90 ரூபாய் கொடுங்க...’’ என்று அதிரடியாகப் பேச, அசந்து போன மெடிக்கல்காரர் ஒரு லைட்டை வாங்கினார்.
அடுத்து, திருவல்லிக்கேணி பக்கத்தில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தவர், பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்து காத்திருந்தவர்களிடம், ‘‘அண்ணே... இந்த டைனமோ லைட்டை வாங்கிப் பாருங்க. பிரகாசமா எரியும்’’ என்று ஆரம்பித்து, பக்கத்து இலை சிக்கன் பிரியாணிக்கே டார்ச் அடித்தார். ‘‘யாருப்பா அது... எங்க கடைக்குள்ளே தனிக்கடை போடறது?’’ என்று கல்லாவில் இருந்து குரல் கேட்டது. கல்லாவைத் திரும்பிப் பார்த்தார் சரவணன். அங்கே ஒரு சார்ஜர் டார்ச் லைட் பிளக்கில் மாட்டப்பட்டிருந்தது.
‘‘சார்... என்ன சார் இன்னும் சார்ஜ் போட்டு பவரை வீணாக்கிட்டிருக்கீங்க! இப்படி ‘டக்டக்’னு பத்துமுறை அழுத்தினா போதும். அப்படியே கண்ணு கூசற அளவுக்கு லைட் அடிக்கும்’’ என்று சொல்லிக்கொண்டே டெமோவும் காட்டினார்.
டைனமோ லைட்டின் பிரகாசத்தில் கல்லாக்காரர் கொஞ்சம் டைலமாவுக்குப் போனார். அவரது முகத்தில் தெரிந்த மாற்றத்தில், பேரம் படியும் என்று புரிய கொஞ்சம் அழுத்தமாக கேன்வாஸ் செய்து ஒரு லைட்டைத் தள்ளிவிட்டார். வாங்கிக் கொண்ட கடைக்காரர், பத்து ரூபாயும் ஐந்து ரூபாயுமாக 85 ரூபாயை எண்ணி வைத்தார் கல்லாகாரர். ‘‘கட்டுபடி ஆகாதுங்க’’ என்று கொஞ்சி, கெஞ்சி பேசி ஐந்து ரூபாயை எக்ஸ்ட்ராவாக வாங்கிக் கொண்டார்.
அந்த நேரத்தில், சாப்பிட்டு முடித்து பில்லோடு வந்தவர்கள் எட்டிப் பார்க்க, ‘‘சூப்பர் லைட் சார்...’’ என்று கல்லாக்காரரே கேன்வாஸ் செய்தார்.
பில்லைக் கொடுத்துவிட்டு, லைட்டைக் கையில் வாங்கிப் பார்த்தவர், நாலைந்துமுறை லிவரை அழுத்திப் பார்த்தார். பிறகு லைட்டை எரியவிட்டுப் பார்த்தார். திருப்தியாக தலையசைத்துக் கொண்டு பர்ஸைப் பிரித்தார்.
பாதிக்கிணறு தாண்டிய உற்சாகத்தில், டிராஃபிக் நிறைந்த திருவல்லிக்கேணி ஹைரோடு சிக்னலுக்கு வந்தார் சரவணன்.
இரண்டு சக்கர வண்டியில் சிக்னலை தாண்டி போன ஒருவர், லைட் வெளிச்சத்தை பார்த்தும் டக்கென்று பிரேக் போட்டு விட்டு, விலையை விசாரிக்க ஆரம்பித்தார். ‘‘நூற்றி இருபது ரூபா சார்’’ என்று சரவணன் சொல்ல, ‘‘நூறு ரூபாய் வைத்திருந்தேன். ஹோட்டலில் இருபது ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டேன். எண்பது ரூபாய் தான் இருக்கு, அதற்கு ஏற்றமாதிரி நல்ல லைட்டாகக் கொடுங்க...’’ என்று காசை நீட்ட, ‘‘சரி கொடுங்க’’ என்று காசை வாங்கிக் கொண்டு லைட்டை கொடுத்த சரவணன், ‘‘என்னை பார்த்தசாரதி கோயில் பக்கமாக இறக்கி விட்டுடுங்க... ப்ளீஸ்...’’ என்று லிப்ட் கேட்டு ஏறிக் கொண்டார்.
கோயில் பக்கம் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்க, டக்கென்று பக்கத்தில் இருந்த அரசு அலுவலர் ஒன்றிய சங்க கட்டடத்துக்குள் போனார் சரவணன். அங்கு தீவிர டிஸ்கஷனில் இருந்த அரசு ஊழியர்கள் என்னவென்று விசாரிக்க... லைட் மேட்டரை சொல்லி விளக்கம் ஆரம்பித்தார். ‘‘தம்பி, என்ன சொல்றீங்க... ஏதாவது ஃப்ரீ உண்டா?’’ என்றார் ஒருவர்.
‘‘பேருதான் சார் லைட்! ஆனா, இதோட செயல்பாடு செம வெயிட். கரகரனு நாலு அமுக்கு அமுக்கி சார்ஜ் பண்ணினா, மினி ட்யூப் லைட் கணக்கா பளிச்னு எரியும். மார்க்கெட்டுக்கு புது பிராடக்ட் சார்... இன்னிக்கு விலை 100 ரூபாய்!’’ என்று சரவணன் சொல்ல, ‘‘அட தம்பி... நல்லாப் பேசுறியே!’’ என்று சொன்ன அந்த அலுவலர், தான் ஒன்றை வாங்கிக்கொண்டதோடு, தன் சகாக்களும் சிபாரிசு செய்து மூன்று லைட்களை வாங்கிக்கொள்ள வைத்தார்.
அங்கிருந்து அப்படியே நடைபோட்டு ஒரு டீக்கடைக்கு வந்தார். ஒரு டீ ஆர்டர் செய்துவிட்டு, வியாபாரத்தை ஆரம்பித்தார்.
‘‘அடிக்கடி கரன்ட் கட் ஆகுதுல்ல சேட்டா... அதுக்கு அருமையான வழியிருக்கு... இதுக்கு ‘டைனமோ லைட்’னு பேரு... பார்த்திருக்கீங்களா..?’’ என்றார். சேட்டா ஆர்வமாகிவிட்டார். ‘‘எங்கே கிடைக்கும் அந்த லைட்?’’ என்று கேட்டார். டக்கென்று பையில் இருந்து லைட்டை வெளியே எடுத்துக் காட்டினார்.
இந்த ட்விஸ்டை எதிர்பார்க்காத சேட்டா, ‘‘முதலாளி இல்லையே...’’ என்று கொஞ்சம் ஜகா வாங்க, ‘‘சேட்டா... நீங்கதான் முதலாளினு எனக்குத் தெரியும். நல்ல பொருள் தேடி வரும்போது வாங்கிப் போடுங்க...’’ என்று கேன்வாஸ் செய்ய ஆரம்பித்தார்.
லைட்டை வாங்கி இருட்டாக இருந்த பக்கத்தில் வெளிச்சத்தை அடித்துப் பார்த்தார். திருப்தி வந்தவுடன், விலையே கேட்காமல் ‘‘பத்து ரூபாய் குறைச்சுக்கோ... சரியா?’’ என்றபடி எடுத்து கல்லாப் பெட்டிக்குள் போட்டார்.
‘‘வெளியிலே 120 ரூபாய்க்கு விற்கறேன். நீங்க பத்தைக் குறைச்சுக்கோங்க...’’ என்றார் சரவணன். சேட்டா தெளிவாக எண்ணி 90 ரூபாயைக் கொடுத்தார்.
கட்டக் கடைசியாக ஒரு லைட் கையில் இருந்தது. ‘‘இதை விற்கப் போறதில்லை... நானே எடுத்துக்கப் போறேன்’’ என்றார் சரவணன். ‘‘உங்க வீட்டுக்கா..?’’ என்றதும், ‘‘இல்லை சார், சென்னையிலேயே இந்த டார்ச் இத்தனை பரபரப்பாக விற்பனை ஆகுதுன்னா... எங்க ஊர் வேலூரில் இன்னும் பரபரப்பாகப் போகும். அங்கே உள்ள கடைக்காரர்களிடம் ஆர்டர் பிடிச்சுக் கொடுக்கலாம்னு ஒரு ஐடியா வந்தது. அங்கே போய் விளக்கம்சொல்லி மாளாது. அதனால், இந்த டார்ச்சைக் கையில்கொண்டுபோய் காட்டி ஆர்டர் பிடிச்சுடுவேன். இந்த டார்ச்தான் இப்போ எனக்கு மூலதனம்’’ என்று சொல்ல, அசந்து போய் அவரைப் பார்த்தோம்.
‘‘ஆர்டர்களைப் பிடிச்சுட்டு அப்புறமா சென்னை வந்து மொத்தமாக வாங்கிட்டுப் போய் வியாபாரம் செய்ய வேண்டியதுதான்...’’ என்று பேசிக்கொண்டே கையில் இருந்த காசை எண்ணினார்.
1,425 ரூபாய் இருந்தது. ஆயிரம் ரூபாயை எண்ணி நம் கையில் கொடுத்துவிட்டு, மீதமிருந்த காசோடு புதிய மூலதனமான டார்ச்சையும் பையில் போட்டுக்கொண்டு கோயம்பேடு பஸ் ஏறினார் சரவணன்.

வீட்டு உள் அலங்காரத் தொழில்

வீட்டு உள் அலங்காரத் தொழிலில்

அழகில் வருதே, அசத்தல் வருவாய்!
 
வீட்டு உள் அலங்காரத் தொழிலில் இருக்கும் கோதண்டராமன் தம்பதி!
ஆ ள் பாதி, ஆடை பாதி என்பார்கள்... அலங்காரம் எத்தனை முக்கியமானது என்பதை உணர்த்துவதற்காகச் சொல்லப்படும் பழமொழி! இது ஆளுக்கு மட்டுமல்ல... வீட்டுக்கும் பொருந்தும்.
வீட்டுக்குள் நுழையும்போதே, விருந்தினர்கள் நம்முடைய குணத்தைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த அளவுக்கு மனிதர்களின் நுட்பமான உணர்வுகளையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது வீட்டு அலங்காரம். தங்கள் ரசனையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இருப்பதால், எல்லோருமே இப்போது வீட்டின் உள்அலங்காரத்தில் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். அதனால், இன்டீரியர் டெக்கரேஷன் என்பது இப்போது நல்ல வரவேற்புள்ள தொழிலாக இருக்கிறது.
கொஞ்சம் கலை ரசனையும், ஆட்களை வைத்து மேற்பார்வை செய்யும் திறமையும் இருந்தால் போதும்... நீங்களும் இந்தத் தொழிலில் சிறப்பாகப் பிரகாசிக்கமுடியும்.
பல போட்டியாளர்கள் இருக்கிறார்களே என்பதைப்பற்றிக் கவலை வேண்டியதில்லை. இதில் கவனிக்க வேண்டியதே வாடிக்கையாளர்களின் திருப்தி, திருப்தி, திருப்தி... மனதுக்குப் பிடித்த வகையில் அழகான பொருட்ளையும் நம்பிக்கையான சர்வீஸையும் ஒருவருக்குக் கொடுத்தால் போதும். அவரே உங்கள் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவார். தரமும் நேர்த்தியும்தான் இத் தொழிலின் தாரகமந்திரம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
வாடிக்கையாளர் யார்?
புது வீடு வாங்குபவர்கள் மட்டுமல்ல... வீட்டை புதுப்பிப்பவர்கள், அழகுபடுத்த நினைப்பவர்கள், அலுவலகங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்கள், பள்ளிக்கூடங்கள், நகைக்கடைகள், ஆஸ்பத்திரிகள் என எல்லையில்லாமல் பரந்து விரிந்து கிடக்கின்றன உங்கள் வாடிக்கையாளர் வட்டம்! தொழில் அதிபர்கள் முதல் தனியார், அரசு அதிகாரிகள் வரை அனைவரும் இதில் அடங்குவர்.
எவ்வளவு முதலீடு தேவைப்படும்?
உங்கள் கற்பனைத்திறனும் கடின உழைப்பும்தான் முதல் முதலீடு. அத்துடன் பொருட்கள் கிடைக்கும் இடம், விலை, போன்றவற்றைத் தெரிந்தும், சாம்பிள்களை(கேட்லாக்)கைவசம் வைத்துக் கொள்ளவேண்டும். மொத்த வியாபாரம் செய்பவர்களுடன் நன்கு பழகிக்கொள்வது உபயோகமாக இருக்கும். மற்றபடி பெரிய அளவில் அலுவலகமோ, இடவசதியோ தேவையில்லை. உங்களைத் தொடர்புகொள்ள ஒரு தொலைபேசி எண் இருந்தால் போதும். அதோடு, ஒரு ஆர்டரின்போது முதலில் பொருட்கள் வாங்க சில ஆயிரங்களைக் கையில் வைத்துக்கொண்டால் நல்லது.
என்ன மாதிரியான வேலை இது?
வீட்டை அழகுபடுத்துவதுதான் அடிப்படையான தேவை என்றாலும் இதில் பலவகைகள் இருக்கின்றன. வீட்டுச் சுவர்களுக்கு ஏற்ற வண்ணங்களில் பெயின்ட் அடிப்பது, அதற்கு ஏற்றமாதிரி திரைச் சீலைகள், கட்டில், சோபா விரிப்புகள் போன்றவற்றைத் தைத்துக்கொடுப்பது, அறைக்கு அழகுசேர்க்கும் விதமாக பூ ஜாடிகள், அலங்கார சுவர் ஓவியங்கள், சின்னச் சின்ன ஸ்டாண்ட்கள் போன்றவற்றை அமைத்துக்கொடுப்பது, முக்கியமாக மிகவும் பயனுள்ள வகையில் சமையலறையை உருவாக்கிக்கொடுப்பது என்று எல்லாமே இன்டீரியர் டிஸைனிங்தான்.
மேற்கூரைகளுக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் கொண்டு டிஸைன் அமைப்பது போன்ற பெரிய வேலைகளை ஆரம்பத்தில் செய்யவேண்டாம். கொஞ்சம் அனுபவம் கிடைத்தபிறகு அதைத் தொடுவது நல்லது.
சுவர்களுக்கான வண்ணத்தைப் பொறுத்த வரையில், எப்போதுமே வெளிர் நிறங்களையே தேர்வு செய்யுங்கள். அடத்தியான வண்ணங்கள் அறையை இருட்டாகக் காட்டும். இப்போது வெளிப்புறச் சுவர்களுக்கு அடர்த்தியான வண்ணங்களைப் பயன்படுத்துவது ஃபேஷனாகி வருகிறது. வாடிக்கையாளரின் விருப்பத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப வண்ணம் பூசிக் கொடுக்கவேண்டும்.
அதேபோல, விதவிதமான பெயின்ட்கள் இருக்கின்றன. வாடிக்கையாளரின் பட்ஜெட்டுக்கு ஏற்றவகையில் வண்ணம் பூசிக்கொடுக்கவேண்டும். குழந்தைகளுக்கான பெட்ரூம் என்றால், வண்ணப் பூச்சுடன் சேர்த்து கார்ட்டூன் உருவங்கள், விலங்குகள் படம் போட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொடுக்கலாம். குழந்தைகள் பயன்படுத்தும் பாத்ரூமிலும் கார்ட்டூன் உருவங்கள் கொண்ட டைல்ஸ்களைப் பதித்துக்கொடுக்கலாம்.
இந்த சுவர் வண்ணங்களுக்கு ஏற்ற நிறங்களில் கதவு, ஜன்னல் களுக்கான திரைச் சீலைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை யும் அமைக்கவேண்டும். துணிகள் விற்கும் கடைகளிலேயே இதற்கென டெய்லர்கள் இருக்கிறார்கள். கதவு, ஜன்னல் திரைக்கான துணிகள் பல விதங்களிலும் பல விலைகளிலும் கிடைக்கின்றன.
படுக்கை அறை விரிப்புகள், தலையணை உறை களுக்கான கலரை சுவரின் வண்ணத்தை விட சற்று திக்கான கலரில் தேர்ந்தெடுக்கவேண்டும். குழந்தை களுக்கான அறையில் உள்ள மெத்தைக்கும், தலையணைக்கும் கார்ட்டூன், பொம்மைகள் உள்ளவாறு செலக்ட் பண்ணவேண்டும். ஃபர்னிச்சர் இன்டீரியர் என்பதும் இதேபோல தனிதுறைதான்.
எப்படி வேலை வாங்குவது?
மேற்சொன்ன வேலைகள் அனைத்துக்கும் தின சம்பளத்துக்கு ஆட்கள் இருக்கிறார்கள். அதனால், தனியாக வேலையாட்களை வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதேசமயம், ஆரம்பத்தில் அவர்களை நேரடியாக வைத்து வேலை வாங்குவதும் கடினம். எனவே தின சம்பளம் எவ்வளவு என ஒன்றுக்கு நாலு இடத்தில் விசாரித்து, அதன் அடிப்படையில் வேலையை கான்ட்ராக்ட்டாக அந்தத்துறையில் அனுபவம் பெற்றவர்களிடம் ஒப்படைத்து விடுவது மிகவும் நல்லது. அவர்கள் வேலை செய்யும்போதே வேலைத்திறன் மற்றும் சிக்கல்களை அறிந்துகொண்டு பிறகு நேரடியாக ஆட்களை அமர்த்தி வேலை வாங்கலாம்.
அதேபோல, வாடிக்கையாளரிடம் டிஸைனிங் பற்றித் தெளிவாகப் பேசிக்கொள்ளவேண்டும். தேவைப்பட் டால், அட்வான்ஸ் மற்றும் பணம் தரும் விவரம் மற்றும் வேலை குறித்து அக்ரிமென்ட் கூட போட்டுக் கொள்ளலாம். அது இரு தரப்பினருக்கும் நல்லது. பில்டிங் இன்ஜினீயர்கள் தொடர்பும் இதில் பெரிய அளவில் உதவும்.
லாப விகிதம்
இன்டீரியர் வேலை என்பது வாடிக்கை யாளரின் குணத்தைப் பொறுத்தது. ஒருவர் 50,000 ரூபாய்க்கு வேலை கொடுக்கலாம், இன்னொருவர் ஒரு லட்ச ரூபாய்க்கும் ஆர்டர் கொடுக்கலாம். ஆர்டர் தொகையில், 15 முதல் 20% லாபம் வைத்துக்கொண்டால், வாடிக்கையாளர்களுக்கு பெரிய சுமையாகத் தெரியாது. பலரும் தேடி வருவார்கள்.
பெரிய அளவில் பண முதலீடு இல்லாமலே சிறப்பாகச் செய்ய ஒரு தொழில் காத்திருக் கிறது. செய்ய நீங்கள் ரெடியா..!